கே. முதலுதவிப் பெட்டிக்குள் என்னென்ன இருக்க வேண்டும்?
முதலுதவிப் பெட்டிக்குள் பின்வருவன இருக்க வேண்டும்:
கே. நோயாளிக்கு இரத்தப் போக்கு அதிகமாய் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
உதவி வரும் வரை காயத்தின் மேல் அழுத்தத்தை விட்டுவிட வேண்டாம்.
கே. நோயாளி வெளிறி, குளிரையும் தலைசுற்றலையும் உணர்கிறார். இதற்குப் பொருள் என்ன?
உடலில் இரத்த ஓட்டம் போதுமான அளவுக்கு இல்லை என்று அர்த்தம். இது உயிருக்கு ஆபத்தான நிலை. ஏனெனில் இது வெகு விரைவில் உடல்திசுக்களில் உயிர்வளிக்குறைவு, மாரடைப்பு அல்லது உறுப்புகள் சிதைவு போன்ற பிற நிலைமைகளுக்கு இட்டுச் செல்லும். காயம் அல்லது நோயால் ஏற்படும் இந்நிலை அதிர்ச்சி என அழைக்கப்படும். இப்படி அதிர்ச்சிக்குள்ளாகும் யாரையாவது நீங்கள் பார்த்தால் உடனே அவரைப் படுக்க வைத்து கால்களை உடலைவிட அதிக உயரத்தில் இருக்குமாறு வைக்கவும். அதாவது கால்கள் இதயத்தை விட அதிக உயரத்தில் இருக்க வேண்டும். இதனால் மூளைக்கும் இதயத்துக்கும் அதிக இரத்தம் பாயும்.
கே. காயத்தைக் கழுவலாமா?
சிறு வெட்டுக்காயம் அல்லது சிராய்ப்புகளில் அழுக்கைக் கழுவலாம். அதிகமாக இரத்தம் வழியும் காயத்தைக் கழுவக் கூடாது. குழாயின் அடியில் கழுவினால் இரத்த உறைவு பொருட்கள் அகன்று இன்னும் அதிகமாக இரத்தம் வழியும்.
அதிக இரத்தப் போக்கின் போது செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்
அதிக இரத்தப்போக்கின் போது செய்ய வேண்டியவை
அதிக இரத்தப் போக்கின் போது செய்யக் கூடாதவை (Don'ts for heavy bleeding)
குளிர் ஒத்தடம் வீக்கத்தையும் வலியையும் குறைக்கிறது.
கூடாது. ஏனெனில் அவை அபாயகரமான தலைக் காயத்தின் அறிகுறிகளை மறைத்து விடக்கூடும்.
கே. மூளையதிர்ச்சி என்றால் என்ன?
தலையில் அடிபடும்போது மண்டையோட்டிற்குள் இருக்கும் மூளை குலுங்கக் கூடும். இதுவே மூளையதிர்ச்சி எனப்படும். சிறிது நேரம் நுனைவிழக்க நேரலாம் (சில வினாடிகளில் இருந்து சில நிமிடங்கள் வரை). பெரும்பாலானோர் மு/ற்றிலுமாக மீண்டு விடுவர். ஆனால் ஒருசில சமயங்களில் இந்நிலை கவலைக்கிடமாக மாறும். யாருக்காவது மூளையதிர்ச்சி ஏற்பட்டால் உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவை அழைக்க வேண்டும்.
கே. மூளையதிர்ச்சியின் அறிகுறிகள் யாவை?
மூளை அதிர்ச்சியின் அறிகுறிகளாவன:
கே. தீப்புண்ணில் தொற்று பரவாமல் இருக்கக் கட்டு இடலாமா? (Should I put a plaster over a burn to make sure it doesn't get infected?)
ஒட்டும் கட்டுகளைப் புண்ணின் மேல் இட்டால் தோலுக்கு மேலும் சேதாரம் ஏற்படும். தொற்று பரவாமல் தடுக்க ஒரு பிளாஸ்டிக் மென்படலம் அல்லது பையை பயன்படுத்தலாம்.
கே. தீப்புண்ணில் துணித்துண்டுகள் சிக்கி இருந்தால் எடுக்க முனையலாமா?
கூடாது. தீய்ந்த பகுதிக்கு அருகில் உள்ள துணி அல்லது நகை போன்றவற்றை அகற்றலாமே தவிர தீக்காயத்தில் ஒட்டி இருக்கும் எதையும் அகற்ற முயற்சி செய்யக் கூடாது. ஏனெனில் மேலும் சேதாரம் ஏற்படலாம்.
தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டியவை
ீக்காயம் பட்டால் செய்யக் கூடாதவை
மாரடைப்பின் போது செய்ய வேண்டியவை:
மாரடைப்பின் போது செய்யக்கூடாதவை:
இதய >இயக்க மீட்பு (CPR)>
இது ஓர் அவசரகால உயிர்காப்பு முறை. அதில் அடங்கியவை:
நெஞ்சை அழுத்துதல்
பலனளிக்கக் கூடிய நெஞ்சழுத்தம் என்பது களைப்பு தருவதாகும். ஓய்வெடுக்கவும் நெஞ்சழுத்தத்தை பலனளிக்கும் முறையில் செய்யவும் பிறர் உதவியை நாடுவது நல்லது.
வாயோடு வாய் செயற்கை சுவாசம்
1-8 வயது குழந்தைகளுக்கு இதய இயக்க மீட்பு
குழந்தைகளுக்கு (12 மாதம் வரை) இதய இயக்க மீட்பு
இதய இயக்க மீட்பை எப்போது நிறுத்த வேண்டும்?
பொதுவாக இதய இயக்க மீட்பு நடவடிக்கை கீழ்வரும் சூழ்நிலைகளில் நிறுத்தப்படும்:
மூக்கில் இரத்தம் வடிதலின் அறிகுறிகள்
கே. மூக்கில் இரத்தம் வடிதலுக்குக் காரணங்கள் என்ன?
கே. மூக்கில் இரத்தம் வடிதலுக்கான முதலுதவி சிகிச்சைகள் யாவை?
குறிப்பு: பதினைந்து நிமிடத்திற்கு நோயாளியை மூக்கை சீந்தாது இருக்கும்படி கூறவும்
கே. ஒரு குழந்தைக்கு அடிக்கடி மூக்கில் இரத்தம் வடிந்தால் என்ன செய்வது?
ஒரு குழந்தைக்கு அடிக்கடி மூக்கில் இரத்தம் வடிந்தால் மருத்துவரை அணுகி அதற்கான காரணத்தை அறிய வேண்டும்.